Friday, 23 August 2019

பாடம் 30:

ஜாதகம் கணித்தலும் ,பலன் அறிதலும்:

           ஒரு உதாரண ஜாதகம்(கற்பனை ஜாதகம்) கணித்து முழு பலன் அறிதல் குறித்து விளக்குகிறேன்.

ஜாதகர் பெயர்:     xxxx
பிறந்த தேதி:          1-8-2019
பிறந்த நேரம்:         காலை 10 மணி
பிறந்த ஊர்:             சிவகாசி
            ஆண் குழந்தை என எடுத்துக் கொண்டு, பாடம் 28ல் சொல்லியபடி ஜாதகம் கணித்தால் கீழ்கண்டவாறு இருக்கும்.

அடிப்படை விவரங்கள்:




ராசி, நவாம்ச கட்டங்கள்:





கிரக நிலை:




ஜாதகரின் தசா விவரங்கள்:



           இனி பலன் கணிப்பதற்கு முன் கீழ்கண்டவாறு தேவையான விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
லக்னம்:(ல)- கன்னி
ராசி:           கடகம்
நட்சத்திரம்: பூசம் 4ம் பாதம்
தசா இருப்பு: சனி தசா 1வருடம்,11மாதம்.12நாள்.

லக்கின சுபர், யோகர், பாபர், மாரகாதிபதி, பாதகாதிபதி:

பாடம் 6ல் கன்னி லக்கின சுபர்: சுக்கிரன், 
                                                யோகர்: புதன், சுக்கிரன்
                                                 பாபர்: சந்திரன்,செவ்வாய்,குரு
பாடம் 12ல் உபய லக்கினமான கன்னிக்கு 7ம் வீடு மாரகம்,பாதக வீடு. 11ம் வீடு மாரக வீடு. அதன்படி 
மாரகாதிபதி, பாதகாதிபதி: 7ம் வீட்டு அதிபதி குரு
மாரகாதிபதி: 11ம் வீட்டு அதிபதி சந்திரன்

பாதசார அடிப்படையில் கிரகங்களின் வலிமை:


சூரியன்       -  பூசம் 4ம் பாதம். - சனி நட்சத்திரம் - பகை
சந்திரன்.      -  பூசம் 4ம் பாதம் -  சனி நட்சத்திரம் - பகை
செவ்வாய்.   - ஆயில்யம் 3ம் பாதம் - புதன் நட்சத்திரம் -  பகை
புதன்.            - புனர்பூசம் 3ம் பாதம் - குரு நட்சத்திரம் - பகை
குரு.      கேட்டை 2ம் பாதம் - புதன் நட்சத்திரம் - பகை
சுக்கிரன்.     - பூசம் 3ம் பாதம் - சனி நட்சத்திரம்  - நட்பு
சனி.               - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் நட்சத்திரம் - நட்பு
ராகு.              - புனர்பூசம் 1ம் பாதம் - குரு நட்சத்திரம் - சமம்
கேது.             - பூராடம் 3ம் பாதம் -சுக்கிரன் நட்சத்திரம் - சமம்

ராசி,அம்சம் அடிப்படையில் கிரக வலிமை:

  சூரியன் - ராசி, அம்சம் இரண்டிலும் நட்பு வீடு
  சந்திரன் - ராசியில் ஆட்சி, அம்சத்தில் நட்பு வீடு
  செவ்வாய்- ராசியில் நட்பு வீடு, அம்சத்தில் பகை வீடு
  புதன்          - ராசியிலும், அம்சத்திலும் ஆட்சி வீடு அத்துடன்                             வர்கோத்தமும் பெற்றுள்ளது.
  குரு.            - ராசியில் நட்பு வீடு, அம்சத்தில் சம வீடு
  சுக்கிரன்.  - ராசியில் பகை வீடு, அம்சத்தில் ஆட்சி
  சனி.           - ராசியில் சம வீடு, அம்சத்தில் உச்சம்

                     பொதுவாகவே கன்னி லக்கினத்தற்கு புதன் வலிமை பெற்றாலே ஜாதகர் சிறப்புடன் வாழ்வார். தொழிலும் புதன் அடிப்படையிலேயே அமையும்.
                     மேலும் நண்பர்களான சுக்கிரனும், சனியும் நன்முறையில் இருப்பதால் அவர்கள் தசை நன்மை அளிககும்.
                       புதன் வலுப்பெற்றதால் லக்கினமும், 10ம் இட  தொழில் பாவமும் சிறப்படையும்.
                        சுக்கிரன் வலுத்ததால் 2ம் இடமும்,9ம் பாவமும் சிறப்படையும். அவற்றின் காரகத்துவங்கள் தசையில் கிடைக்கும்.
                        செவ்வாய் வலுக்குறைவதாலும்,தனித்த குரு 3ம் இடத்தில் இருப்பதால் 3ம் இட காரகத்துங்கள் முழுமையாக கிடைக்காது.
                          4ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாருக்கு சிறப்பளிக்காது. மேலும் 4ம் இட அதிபதி குரு 4ம் இடத்தற்கு 12ம் இடத்தில் இருப்பதால் 4ம் இடத்தின் முழுப்பலனும் கிடைக்காது. ஆனால் சனி இருப்பதாலும், புதன் பார்பதாலும்,சிறிது சிரம்மத்தற்குப் பின் பலன் கிடைக்கும்.
                           5ம் பாவ அதிபதி சனி 5ம் பாவத்திற்கு 12ல் இருப்பதால் 5ம் பாவ பலன்கள் சிறிது சிரமத்திற்குபின்
கிடைக்கும்.
                           6ம் பாவ அதிபதி சனியே 6ம் பாவத்தைப் பார்பதால் 6ம் இட தீய பலன்கள் குறையும்.
                             7ம் பாவ அதிபதியான குருவே 7ம் பாவத்தை பார்த்துவிடுவதால் 7ம் பாவம் சிறப்படையும்.
                             8ம் பாவ அதிபதி செவ்வாய் அம்சத்தில் வலிமை இழப்பதால் 8ம் இட தீய பலன்கள் குறையும்.
                             11ம் பாவ அதிபதி சந்திரன் அங்கேயே ஆட்சி பெறுவதால் 11ம் பாவ பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
                              12ம் பாவ அதிபதி சூரியன் சனியின் சாரம்
பெற்று வலுக்குறைவதால் 12 பாவ நீய பலன்கள் குறையும்.
                              பலன் கூறும் பொழுது மேற்கூறியவாறு கணித்து,பின் அந்தந்த பாவத்தின் காரகங்களை பலனாக கூறவேண்டும். எனவே 12 பாவங்களின் காரகத்துவங்களும் நன்கு படித்து மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.
             
                               அடுத்து கிரகங்களின் வலிமையை கணித்துவிட்டதால் தசைகளின் பலனை எளிதாக கூறலாம். பாடம் 29ல் குறிப்பிட்டபடி தசைகளில் புத்தியைக் கொண்டு அவற்றின் வலிமைக்கு ஏற்ப பலன் கூறவேண்டும்.
                                 உதாரணமாக சனி தசையில் புத்திகள் எவை என்பதனை சனி தசையை அழுந்துவதின் மூலம் கீழ்கண்டவாறு காணலாம்.

அதாவது சனி தசையில் கடைசியாக ராகு புத்தி 1.1.2019ல் முடிந்து குரு புத்தி 13.7.2021 வரை உள்ளது என்பதனை அறியலாம்.

            இதுதான் ஜாதகம் கணித்து பலன் சொல்வதின் அடிப்படை. இனி வரும் பாடங்களில் இவை குறித்து மிக விரிவாக பல தரப்பட்ட ஜாதக்கள் மூலம் விளக்குகிறேன்.

முக்கிய குறிப்பு:

  ஜாதகப் புத்தகத்தை எடுத்தவுடன் முதலில் ஜாதகரின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை உறுதி செய்தபின் நாமே software( மென்பொருள்) மூலம் ஜாதகம் கணித்து அதன் மூலம் மட்டுமே பலன் சொல்வது சிறந்தது.





No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...