Tuesday, 27 August 2019

பாடம் 31: கோச்சார பலன்

பாடம் 31:


கோச்சார பலன்:

         ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும்.


அதாவது பலன்கள்‌ சொல்வதில்‌ இரண்டு முறை இருக்கிறது. பிறக்கும்‌ போது இருக்கும்‌ தசா புத்திகள்‌, கிரக அமைப்புகளை வைத்துச்‌ சொல்வது. மற்றொன்று தற்கால கிரக நிலைகளை வைத்து பலன்‌ கூறுவது.                           

தற்கால கிரக நிலைகளை வைத்துதான்‌ வாரப்பலன்‌, தினப்‌ பலன்‌, வார ராசி,
மாத ராசி, குருப்பெயர்ச்சிப்‌ பலன்களையெல்லாம்‌ கொடுக்கிறோம்‌. தற்கால
கிரக நிலைகளுக்கு வலிமை அதிகம். நல்ல தசா புத்தி நடக்காதவர்களுக்கு
தற்கால கிரக நிலை வலிமையாக வேலை செய்யும்‌. தசா புத்தி பலவீனமாக
இருக்கிறவர்களுக்கு கோச்சார கிரகங்கள்‌, அதாவது தற்போது எங்கெங்கு
நன்றாக இருக்கிறதோ அதுமாதிரி. ஒருத்தருக்கு மோசமான திசை நடக்கிறது
என்று வைத்துக்கொள்வோம்‌. அதாவதுக்குரிய திசை, 8க்குரிய திசை,
பாதகாதிபதி திசை நடந்து அவர்களுக்கு ஏழரைச்‌ சனியும்‌
வந்துவிட்டால்‌ அவருடைய பாடு திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌
கொண்டுபோய்விடும்‌ திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌ கொண்டுபோய்விடும்‌
யோக திசை நடக்கும்‌ போது மோசமான ஏழரைச்‌ சனியெல்லாம்‌ வருகிறதென்றால்‌,
அவர்களை அது காப்பாற்றும்‌. ஏற்பக்கூடிய பாதிப்புகள்‌, அவர்களுக்கு
இல்லாமல்‌ போகும்‌. கோச்சாரப்‌ பலன்களை வைத்துதான்‌ ராசிப்பலன்‌
சொல்கிறோம்‌. ஆனால்‌ அவரவர்கள்‌ பிறந்த நேரத்திற்கு உரிய கிரக
அமைப்புகள்‌ தசா புத்திகளை அடிப்படையாக வைத்து
கோச்சாரப்‌ பலன்களின்‌ எண்ணிக்கை அதிகமாவதோ
குறைவதோ உண்டாகும்‌. அதனால்‌ அவரவர்கள்‌ பிறந்த
ஜாதகம்‌ முக்கியம்‌. அதில்‌ நடக்கும்‌ தசா புத்தியும்‌ முக்கியம்‌.



கோச்சாரம்‌ என்பது அவுட்லைன்‌ மாதிரி. அது
ஒரு ஆழமான விஷயம்‌ கிடையாது. உதாரணத்திற்கு ஒருத்தருடைய 6வது
வீட்டிற்கு சூரியன்‌ வருகிறார்‌. 6ல்‌ சூரியன்‌ வந்தால்‌ திடீர்‌ லாபம்‌,
திடீர்‌ யோகம்‌, அரசாங்கத்தால்‌ பதவி, வழக்குகளில்‌
வெற்றி போன்று உண்டாகும்‌. 3வது வீட்டில்‌ செவ்வாய்‌ உட்கார்ந்தாரென்றால்‌
புதிய முயற்சிகளில்‌ வெற்றி போன்றெல்லாம்‌ உண்டாகும்‌ என்று சொல்கிறோம்‌.
அந்த நேரத்தில்‌ சூரிய திசை, சூரிய புத்தி இருந்ததென்றால்‌ அந்தப்‌ பலன்‌
அப்படியே நடக்கும்‌.சூரியன்‌ சாதகமாக இருந்து சூரிய திசை,
சூரிய புத்தியும்‌ நடந்து கோச்சாரத்திலும்‌ சூரியன்‌ 6வது வீட்டிற்கு வந்தால்‌
அரசாங்கத்தில்‌ பெரிய பதவிகள்‌ கிடைப்பது போன்று
உண்டாகும்‌. - ஆனால்‌, அவருடைய ஜாதகத்தில்‌, சூரியன்‌ பலவீனமாக இருந்து,
சூரியன்‌ கெட்டவராக இருந்தால்‌ நல்ல பலன்கள்‌ கொஞ்சம்‌ குறையும்‌.
அதனால்‌ கோச்சாரப்‌ பலன்களை வைத்து கொடுக்கும்‌
ராசி பலன்களெல்லாம்‌ ஒரு அவுட்‌ லைன்‌ அவ்வளவுதான்‌.
பாடம் 11ல் கிரகங்களின் சஞ்சாரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அத்துடன் கோச்சாரத்தில் கிரகங்கள் நற்பலன்கள் கொடுக்கும்
இடங்களை கீழே படியலிடுகிறேன். நன்கு மனதில் இருத்திக் கொள்ளுங்கள.


சூரியன்:      - ராசியிலிருந்து 3,6,10,11 வீடுகள்
சந்திரன்:      - ராசியிலிருந்து 3,6,7,10,11 வீடுகள்
செவ்வாய்.   - ராசியிலிருந்தது 3,6,10,11 வீடுகள்
புதன்.            - ராசியிலிருந்து 2,4,6,10,11 வீடுகள்
குரு.               - ராசியிலிருந்து 2,5,7,9,11 வீடுகள்
சுக்கிரன்.     - ராசியிலிருந்து 1,2,3,4,5,9,11 வீடுகள்
சனி.               - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
ராகு.              - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
கேது.             - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்

சனியின் கோச்சார பலன்கள்:

ராசிக்கு 12ல்‌ சனி வரும்‌ போது 71/2 நாட்டுச்‌ சனி ஆரம்பமாகி
12ம்‌ இடம்‌ ராசி, 2ம்‌ இடம்‌ ஆகிய மூன்று ஸ்தானங்களிலும்‌
71/2 வருடங்கள்‌ சஞ்சரிக்கும்‌ அந்தக்‌ காலம்‌ நல்ல தசாபுத்திகள்‌
நடந்தால்‌ ஒழிய நல்ல பலன்‌ களைப்‌ பார்ப்பது
அரிது. பல துன்பங்களையும்‌, துயரங்‌களையும்‌ அளித்தே
தீரும்‌. அச்சமயம்‌ சனி பகவான்‌ ப்ரீதி செய்வது நல்லது. அவர்‌
ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று பகவான்‌ ப்ரீதி செய்வது
நல்லது. அவர்‌ ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று வரவேண்டும்‌.
ராசிக்கு 4ம்‌ இடத்தில்‌ சனி வரும்‌ போது அர்த்தாஷ்டமச்‌ சனி
என்று பெயர்‌. 7ம்‌ இடத்தில்‌ சனி வரும் போது கண்டச்‌ சனி என்று பெயர்.
8ம் இடத்தில்‌ வரும் போது அஷ்டமச்‌ சனி என்று பெயர். இது காலங்களில் சனியின்
கொடுமை அதிகமாகவே இருக்கும்‌.ஆனால் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,
கன்னி,துலாம்,மகரம் ராசிகளுக்கு அதிக கெடு பலன்களைச் செய்யாது.

No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...